shadow

8

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘வேட்டை’ படத்தில் ஆர்யாவுக்கும் அமலாபாலுக்கும் திருமணம் நடைபெறுவது போன்ற காட்சி இருக்கும். அதே போல் மீண்டும் ஒருமுறை இவர்கள் இருவருக்கும் திருமண நடப்பது போன்ற காட்சி கோவை திருமண மண்டபத்தில் படமாக்கப்பட்டது. இந்த திருமணத்தை நிஜ திருமணம் போலவே நடத்த இயக்குனர் பார்த்திபன் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்.

இயக்குனர் பார்த்திபன் தற்போது “கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற படத்தை நடித்து, இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆர்யா மற்றும் அமலாபால் ஆகிய இருவரும் கெளரவ வேடத்தில் நடிக்கின்றனர். படத்தில் காதல் ஜோடிகளாக வலம் வரும் இருவரும் திருமணம் செய்வது போன்ற காட்சி ஒன்று நேற்று கோவையில் உள்ள ஒரு மிகப்பெரிய திருமண மண்டபத்தில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பை காண ஏராளமானோர் வந்திருந்தனர்.

அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் பட்டு வேட்டி பட்டு சட்டை  அணிந்திருந்த ஆர்யா, அமலாபாலின் கழுத்தில் கெட்டி மேளம் முழங்க தாலிகட்டினார். இந்த திருமண படப்பிடிப்பை ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி வருகின்றன. எனவே இயக்குனர் விஜய் இதுகுறித்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எத்தனையோ படங்களில் திருமணம் நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாக்கபடுவதாகவும், இந்த திருமணத்திற்கு மட்டும் ஏன் ஊடகங்கள் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கின்றது என்று தெரியவில்லை  என்றும் விஜய் கூறியுள்ளார்.

நடிகை அமலாபாலும், இயக்குனர் விஜய்யும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply