அனுமாரை அவமதித்தாரா அரவிந்த கெஜ்ரிவால். கைது செய்ய வலியுறுத்தும் நெட்டிஸன்ஸ்
டெல்லி முதல்வர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் தலைவராக இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியான கார்ட்டூன் ஒன்றை அவர் தன்னுடைய டுவிட்டரில் ரீடுவீட் செய்ததால்தான் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அப்படி என்னதான் இருந்தது அந்த கார்ட்டூனில் என்பதை பார்ப்போம்.
இலங்கையை தனது வாலில் ஏற்பட்ட தீயால் அனுமார் பற்ற வைத்து எரித்ததுபோல் அவரை போன்ற ஒருவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தை பற்ற வைத்துவிட்டு நேராக பிரதமர் மோடியிடம் வந்து ‘பற்ற வைத்துவிட்டேன். இனி மக்கள் பதான்காட் தாக்குதல், ரோஹித் விவகாரம், பங்குச்சந்தை சரிவு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றை மறந்துவிடுவார்கள் என்று சொல்வதுபோல் அந்த கார்ட்டூன் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பற்ற வைத்துவிட்டதாக சொல்பவர் இந்துக்கள் புனிதமாக வணங்கும் அனுமாரை போல் இருப்பதாகவும், இந்த டுவிட்டை ரீடுவிட் செய்த அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய வேண்டும் என்றும் டுவிட்டர்வாசிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் #KejriwalInsultsHanuman என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் பலர் கருத்துகூறி வருகின்றனர்.
Chennai Today News: .ArvindKejriwal insults Lord Hanuman?
Leave a Reply
You must be logged in to post a comment.