மும்பையில் உள்ள பரபரப்பு மிகுந்த பகுதிகளில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டோ மற்றும் மின்சார ரயிலில் பயணம் செய்ததால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலிஸார்களுக்கு கடும் தலைவலியை ஏற்பட்டது.
இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி நிதி திரட்டுவதற்காக மும்பைக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் காரில் செல்லாமல் ஆட்டோவில் சென்றதால் பாதுகாப்பு கொடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியும் போலீஸார் கேட்கவில்லை.
விமான நிலையத்தில் இருந்து நேராக அந்தேரி ரயில் நிலையத்திற்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலை பார்க்க பயங்கர கூட்டம் கூடியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. ரயில் நிலையம் அருகே உள்ள இடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது ஆம் ஆத்மி கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த மெட்டல் டிடெக்டர் கருவி உடைக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்துவதற்கு போலீஸார் திணறினர்.
கெஜ்ரிவாலின் இந்த பயணத்தால் மும்பை பொதுமக்களுக்கும் கடும் சிரமம் ஏற்பட்டது. ரயிலில் பயணம் செய்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.