shadow

election-4-2122013

தெற்கு டெல்லியில் உள்ள தக்ஷின்புரி பகுதியில் இன்று காலை தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை மர்ம மனிதர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை தெற்கு டில்லியில் திறந்த வேனில் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை பொதுமக்களும், ஆம் ஆத்மி தொண்டர்களும் நெருங்கி அவருக்கு கைகொடுத்தனர். மகிழ்ச்சியுடன் அவர்களிடம் கைகுலுக்கிக் கொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் திடீரென கன்னத்தில் பளார் என அறைந்ததால் ஆம் ஆத்மி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரை பிடித்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்படுவது இதுமுதல் தடவை அல்ல. ஏற்கனவே கடந்த மார்ச் 28ஆம் தேதி ஹரியானாவில் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அன்னா ஹசாரே ஆதரவாளர் ஒருவர் தாக்கியது நினைவிருக்கலாம்.

Leave a Reply