உலக ஜிம்னாஸ்டிக் போட்டி: இந்தியாவின் அருணாரெட்டிக்கு வெண்கலம்
ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அருணாரெட்டி வெண்கலம் வென்று சாதனை படைத்தார்
ஜிம்னாஸ்டிக் உலக கோப்பையில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அருணாவின் சாதனை கண்டு நாடு பெருமிதம் கொள்வதாககுடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அருணா ரெட்டிக்கு ரூ.2 கோடி பரிசு வழங்குவதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். மேலும் பதக்கம் வென்ற அருணா ரெட்டி தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.