மணிரத்னம் படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோ
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி ஆகிய மூன்று ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர். மூவருமே கோலிவுட் திரையுலகில் பிரபலம் என்பதால் மூவருக்கும் சமமான முக்கியத்துவம் கதையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இதே படத்தில் நான்காவதாக இன்னொரு ஹீரோ தற்போது இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர்தான் அருண்விஜய். நேற்று அதிகாரபூர்வமாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளிவந்த பின்னர் அருண்விஜய் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.