பிரபல இயக்குனரின் மகன்களுக்கு ஆட்டோகிராப் போட்ட விஜய்
பிரசன்னா-சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘பெருச்சாழி’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண்வைத்தியநாதன் தற்போது அர்ஜூன் நடிக்கும் ‘நிபுணன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.
இந்த நிலையில் அருண் வைத்தியநாதனின் இரண்டு மகன்களான ஆதித் மற்றும் அத்வைத் ஆகியோர் பக்கா விஜய்யின் வெறித்தனமான ரசிகர்களாம். இவர்களுடைய நீண்ட நாள் ஆசையான விஜய்யின் ஆட்டோகிராப் ஆசை இன்று நிறைவேறியுள்ளது.
ஆம் தற்போது விஜய்யை நேரில் சந்தித்த ஆதித், அத்வைத் அவரிடம் ஆட்டோகிராப் பெற்றுள்ளனர். ‘மெர்சல்’ படம் போட்ட பனியனுடன் விஜய்யை சந்தித்த பின்னர் இருவரும் சந்தோஷத்துடன் போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது இண்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.