கடந்த சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் ஆன பாலிவுட் திரைப்படம் ராம்லீலா வசூலில் பெரும் சாதனையை ஏற்படுத்தியது. அதுபோலவே ராம்லீலா பல சிக்கல்களையும் சந்திக்க நேர்ந்தது.
இந்து மக்களின் மனதை புண்படுத்தும் காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும், இந்த படத்தின் தலைப்பு இந்துக்கள் புனிதமாக கருதும் ராமரின் பெயரை வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டது. படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி, ரன்வீர்சிங், தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று முன் தினம் முஜாபர்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்படது.
ஆனால் நேற்று நீதிமன்றத்தில் சம்மந்தப்பட்ட யாரும் ஆஜராகாததால் தீபிகா படுகோனே உள்பட அனைவரையும் கைது செய்து ஜூன்4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோனேவை கைது செய்ய உத்தரவிட்டு இடப்பட்டுள்ளதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.