தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை குயிலி ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பூவிலங்கு படத்தில் முரளிக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை குயிலி அதன்பின்னர் பல தமிழ்திரைப்படங்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
நடிகை குயிலி கடந்த பாராளூமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் திருத்துறைப்பூண்டியில் கடந்த மார்ச் 25ஆம் தேதி பிரச்சாரம் செய்தபோது, அனுமதி பெறாத சில இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்ததாக நடிகை குயிலி மீது வழக்கறிஞர் அன்பரசன் என்பவர் போலீஸில் புகார் செய்தர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று நடிகை குயிலி ஆஜராகவில்லை. அவரது சார்பில் அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இதனால் நடிகை குயிலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நிதிபதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.