200 வீடுகள் இடிப்பு, மின்சாரமும் கட்: சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேசத்தினர்களா?

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்காக சமீபத்தில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள Kariyammana Agrahara என்ற பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 200 குடிசைகளில் வாழ்ந்து வந்த நிலையில் அந்த வீடுகள் நேற்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டன

அதுமட்டுமின்றி அந்த பகுதியில் இருந்த அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டிருந்த மின்சாரம் மற்றும் தண்ணீர் சப்ளையும் நிறுத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதேபோன்று வங்கதேசம் உள்பட மற்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இருநூறுக்கு இருநூறு வீடுகள் ஒரே நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply