shadow
மின்கட்டண உயர்வு அறிவிப்பு செய்த அமைச்சருக்கு அடி உதை.
argentinaமின்கட்டணம் உயர்வு என்று அறிவிப்பு செய்த அமைச்சர் ஒருவர் கடுமையாக பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அர்ஜெண்டினா நாட்டில் நடந்துள்ளது.

அர்ஜெண்டினா நாட்டில் கடந்த மாதம் பொறுப்பேற்ற மாரிசியோ மாக்ரி என்பவர் தலைமையிலான இடது சாரி ஆட்சியில் இருக்கும் மின் அமைச்சர் இதுவரை மின்கட்டணங்களுக்கு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்ததோடு ஏழு மடங்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளர். இதற்கான அறிவிப்பு ஒன்றை அவர் தொலைக்காட்சியில் செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த தொலைக்காட்சி நிலையத்திற்குள் புகுந்த பொதுமக்கள் மின்சார துறை அமைச்சரை சரமாரியாக தாக்கினர். பின்னர் தொலைக்கட்சி ஊழியர்கள் அமைச்சரை காப்பாற்றி அவரை பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது இருக்கும் கட்டணத்தை விட ஏழுமடங்கு கட்டணத்தை உயர்த்துவது அராஜகத்தின் உச்சம் என்றும் இந்த ஆட்சியை உடனே அகற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றனர்.

Leave a Reply