shadow

மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி

மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அரவிந்த்சாமி அதன் பின்னர் அவரது இயக்கத்தில் ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அலைபாயுதே’, ‘கடல்‘ ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சமீபத்தில் ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் அறிமுகமான அரவிந்தசாமி தற்போது பிசியான நடிகர்களில் ஒருவராக உள்ளார். ஏற்கனவே மூன்று படங்களில் நடித்து வரும் அரவிந்தசாமி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள்டஹு.

‘காற்று வெளியிடை’ படத்தை அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ள மணிரத்னம் இப்படத்தில்தான் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply