இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக நடந்த அதிர்ச்சி சம்பவம்
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு காரணமாக ஒருதொகுதியின் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே மாறி மாறி மிக அதிகளவிலான பணப்பட்டுவாடா நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளதால் இந்த தொகுதியின் தேர்தலை வரும் 23ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, ‘அரவக்குறிச்சி தொகுதியில் நியாமான தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என தெரிய வருவதால், அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்படுகிறது. மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 25 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என கூறியுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவில் பணப்பட்டுவாடா காரணமாக முதல்முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.