தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் ‘பாஹுபாலி’ திரைப்படம் தமிழில் ‘மஹாபாலி’ என்ற பெயரில் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜாமவுலி இந்த படத்தின் டைட்டிலை தமிழிலும் பாஹுபாலி’ என்ற பெயரையே வைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன,
தமிழ் ஊடகங்களில் பெரும்பாலும் இந்த படம் குறித்த செய்திகள் வெளிவரும்போது பாஹுபாலி என்ற பெயருடனே வருவதாகவும், மஹாபாலி’ என்ற பெயர் தமிழ் ஊடகங்கள் மத்தியிலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ரீச் ஆகவில்லை என்பதாலும் எஸ்.எஸ்.ராஜமவுலி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ளார். வரும் மே மாதம் 22ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பாஹுபாலி படத்தின் தமிழ் வசனங்களை மதன்கார்க்கி எழுதியுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் உரிமையை கோலிவுட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோ க்ரீன் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.