சென்னை அண்ணா சாலை ரஹேஜா டவரில் தீவிபத்து: பெரும் பரபரப்பு

சென்னை அண்ணா சாலையில் உள்ள ரஹேஜா டவர் என்ற பிரமாண்டமான கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை அண்ணா சாலையில் பிரமாண்டமாக இருக்கும் ரஹேஜா சாலையில் நூற்றுக்கணக்கான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உடனடியாக அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து தற்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave a Reply