தேசத்தந்தை மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொல்லப்பட்டது போலவே தனது மரணமும் இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஆனால் அதற்காக தான் அஞ்சப்போவது இல்லை என்றும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் லோக்பால் மசோதா நிறைவேற்றக் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தீவிரமாக போராடி வந்தார். ஹசாரேவின் போராட்டத்திற்கு அடிபணிந்த அன்றைய மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றியது.
இந்நிலையில் தற்போது மத்தியிலும் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராகவும் அன்னா ஹசாரே போராட்ட களத்தில் குதித்துள்ளார். நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஹசாரே போராட்டம் நடத்தி வரும் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் அன்னா ஹசாரேவின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப்பில் பயணம் மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரே, செய்தியாளர்களிடம் பேசுகையில் திடுக்கிடும் தகவல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். “தனக்கு கனடாவில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், அதை வைத்து பார்க்கும் போது மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போலவே தனது மரணமும் இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.