அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வீசியவர் கல்லூரி மாணவனா? அதிர்ச்சி தகவல்
நேற்று மாலை அண்ணா மேம்பாலம் அருகே 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து நாட்டு வெடி குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இதுகுறித்து காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வெடிகுண்டை வீசியவர் யார் என்பது குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்
இந்த நிலையில் மர்ம நபர்கள் வந்த இருசக்கர வாகனம் குறித்த அடையாளம் தற்போது தெரிய வந்துள்ளது. அந்த இரு சக்கர வாகனத்தை நந்தனம் அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் ஓட்டி வந்ததாகவும் தற்போது கூறப்படுகிறது
இந்த அதுமட்டுமின்றி அந்த பைக் உரிமையாளரின் அடையாளம் தெரிந்து விட்டதாக போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர். இதனை வைத்து மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அந்த மாணவனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது
அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசியது ஒரு மாணவன் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.