shadow

anjali_jayam_ravi_new_film_detailsஇயக்குனர் களஞ்சியம் இயக்கிவந்த “ஊர் சுற்றிப்புராணம்” என்னும் படத்தில் நடிக்கும்போதுதான் பிரச்சனை ஏற்பட்டு அஞ்சலி சில காலம் தலைமறைவாக இருந்தார். அதன்பின்னர் மீண்டும் திரும்பி வந்த அஞ்சலி தமிழ்ப்படத்தில் நடிக்காமல், தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது படத்தில் நடிக்காத அஞ்சலியை வேறு எந்த தமிழ்ப்பட இயக்குனர்களும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என இயக்குனர் களஞ்சியம் இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இதனால் ஜெயம் ரவியின் புதிய படத்தில் நடிப்பதாக இருந்த அஞ்சலிக்கு நெருக்குதல் ஏற்பட்டது. ஆனால் தற்போது ஜெயம் ரவியின் படத்தை இயக்கவுள்ள சுராஜ், அஞ்சலியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளார்.

ஒரு படத்தில் யார் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்வது இயக்குனர்தான். இதில் இயக்குனர் சங்கமோ அல்லது வேறு சங்கமோ தலையிடக்கூடாது என்றும், அஞ்சலிக்கும் களஞ்சியத்துக்கும் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று மட்டும் சங்கம் பேசிக்கொள்ளட்டும், எங்கள் படத்தில் அஞ்சலி நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஜெயம் ரவி படத்தில் அஞ்சலி நடிப்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply