shadow

anjali-back-to-workநீண்ட இடைவெளிக்கு பின்னர் அஞ்சலி நடிக்கவிருக்கும் தமிழ்ப்படம் ஒன்று இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

அங்காடித்தெரு, கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் கடந்த வருடம் சித்தியிடம் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், இயக்குனர் களஞ்சியத்தின் டார்ச்சர் காரணமாகவும் சிலகாலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். பின்னர் இவர் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.

பின்னர் இந்த வருட தொடக்கத்தில் அஞ்சலி ஆந்திராவுக்கு வந்து தெலுங்கு படத்தில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில் நடித்தவந்த  அஞ்சலி தொடர்ந்து நடிக்க மறுப்பதாகவும், இதனால் அஞ்சலி தனக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று இயக்குனர் சங்கத்தில் இயக்குனர் களஞ்சியம் புகார் கொடுத்தார். இயக்குனர் சங்கமும் அஞ்சலிக்கு தடை விதிக்க ஆலோசனை செய்து வந்தது.

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்க சுராஜ் இயக்கும் படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் ஆனார். இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் அஞ்சலிக்கு களஞ்சியத்தால் பிரச்சனை வரும் எதிர்பார்த்து தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் படப்பிடிப்புக்கு காவல் உள்ளனர். எந்த பிரச்சனையையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், தனக்கு தடை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று அஞ்சலி கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Leave a Reply