இந்தியாவின் பிரபல ஒளிப்பதிவாளர் என்ற புகழ்பெற்ற சந்தோஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “துப்பாக்கி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த போது முதன்முதலாக பெரிய வகை டிஜிட்டல் கேமிராவை பயன்படுத்தியதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பில் மும்பையின் தெருக்களில் சில இடங்களில் கேமராவை ஒளித்து வைத்து படப்பிடிப்பு நடத்தியது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட அதே சூழ்நிலையில்தான் தற்போது அஞ்சான் படத்தின் படப்பிடிப்பில் நடப்பதாகவும், துப்பாக்கி படத்தில் பெற்ற அனுபவங்கள் அஞ்சானுக்கு தனக்கு உதவுவதாகவும் கூறியுள்ளார். பல காட்சியில் மும்பையில் துப்பாக்கி படத்தை எடுத்த இடத்திலேயே அஞ்சான் படப்பிடிப்பும் நடந்து வருவதாக கூறினார் சந்தோஷ்சிவன். இருப்பினும் துப்பாக்கி படத்தை ஒப்பிடும்போது அதில் இருந்த த்ரில் அஞ்சான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தபோது இல்லை என்றே எனக்கு தோன்றியது.
அஞ்சான் திரைப்படத்தின் டீசர் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.