சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ”அஞ்சான்’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் முடிந்துவிட்டது. தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு புனே அருகில் உள்ள பஞ்சகனி என்ற இடத்தில் நடந்து வருகிறது.

புனேவில் உள்ள பஞ்சகனி என்ற இந்த இடத்தில்தான் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. ரஜினி, நயன் தாரா ஆடிப்பாடும் ‘பல்லேலக்கா ‘ என்ற பாடல் காட்சி உருவான அதே இடத்தில் தற்போது சூர்யா, சமந்தாவுடன் நூற்றுக்கணக்கான துணை நடிகர், நடிகைகள் ஆடிப்பாடும் பாடல் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.  மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் வரும் சுதந்திர தினத்தில் வெளியாகிறது.

Leave a Reply