shadow

anjaanசூர்யா, சமந்தா நடித்த அஞ்சான் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இந்த விழாவில் சூர்யா, லிங்குசாமி, யூடிவி தனஞ்செயன், கேயார், காமெடி நடிகர் சூரி, யுவன்ஷங்கர் ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவிற்கு தவிர்க்க இயலாத காரணங்களால் சமந்தா கலந்துகொள்ள முடியவில்லை என விழாக்குழுவினர் சார்பில் கூறப்பட்டது. சமந்தா விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், சமந்தாவை பற்றி குறிப்பிடாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு விழா இருந்தது.

சூர்யா பேசும்போது, ‘சமந்தா படப்பிடிப்புக்கு வருகிறார் என்று தெரிந்தாலே போதும். யூனிட்டில் இருப்பவர்கள் அனைவரும் அன்று பிரஷ்ஷாக வந்திருப்பார்கள். சமந்தா படப்பிடிப்புக்கு வந்தாலே அன்று படக்குழு சுறுசுறுப்பாகிவிடும் என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் கூறும்போது, “சமந்தாவிற்கு தோல் வியாதி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் அவர் இதுவரை எந்த படத்திலும் அதிகமாக அவரது ஸ்கின் தெரியும்படி நடித்ததில்லை. ஆனால் இந்த படத்தில் லிங்குசாமி சமந்தாவை அதிகப்படியான கவர்ச்சியில் காட்டி, சமந்தாவிற்கு எந்தவித ஸ்கின் வியாதியும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார். அவருக்கு சமந்தாதான் நன்றி சொல்லவேண்டும் என்று காமெடியாக பேசியதும் விழா மேடையே சிரிப்பலையில் அதிர்ந்தது.

Leave a Reply