shadow

ரஜினிமுருகன்’ படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த அனிருத்
anirudh
தனுஷ், அனிருத், சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்களாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருந்த மும்மூர்த்திகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒருசில காரணங்களால் தற்போது தனுஷூக்கு சிவகார்த்திகேயனுக்கும் ஒரு இடைவெளி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் தனுஷூக்கும் அனிருத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே ‘கொடி’ படத்தில் அனிருத் தூக்கப்பட்டு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் அனிருத்தும், சிவகார்த்திகேயனும் இன்னும் நெருக்கமான நண்பர்களாக நீடித்து வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் நாளை சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ திரைப்படம் வெற்றி பெற அனிருத் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளில் வெளியாகும் ‘ரஜினிமுருகன்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற சிவகார்த்திகேயனுக்கும் ‘ரஜினிமுருகன்’ படக்குழுவினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்வதாக அனிருத் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply