shadow

shadow

பர்மாவில் விரைவில் பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில் அந்நாட்டின் முக்கிய தலைவர் ஆங் சான் சூச்சி தேர்தலில் நிற்கவுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலைஇயில் பிரபல ஹாலிவுட் நடிகையும் சமூக சேவகியுமான ஏஞ்சலினா ஜோலி பர்மாவிற்கு நான்கு நாள் சுற்றுப்பயணமாக நேற்று வந்தடைந்தார். அவரை விமானநிலையத்தில் ஆங் சான் சூச்சி சிறப்பான முறையில் வரவேற்றார். இருவரும் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

ஆஸ்கார் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு பிரச்சனைகள் குறித்து அந்தந்த நாட்டு தலைவர்களிடம் ஆலோசனை செய்து வரும் நிலையில் நேற்று பர்மாவுக்கு சென்றார். முதலில் அதிபர் தெய்ன் சீன் அவர்களை சந்தித்த பின்னர் புத்தகுருமார்களை சந்தித்தார்.

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூச்சி அவர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார். ‘தி லேடி ஆப் பர்மா’ என்று போற்றப்படும் ஆங் சான் சூகி அவர்களை சந்தித்து உரையாடியது தனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும், அவர் ஆட்சிக்கு வந்தால், பர்மாவில் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ததாகவும் ஏஞ்சலினா ஜோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தர்.

Leave a Reply