குழந்தையின் பசியை போக்க 7.5 கோடி நிதி வழங்கிய பிரபல நடிகை
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளன.
இந்த காரணத்தால் ஏழை எளியவர்கள் மற்றும் அன்றாடம் வருமானத்தில் வாழ்பவர்கள் பசியால் திண்டாடி வருகின்றனர்
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் அந்நாட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன
இந்த நிலையில் ஏழை எளிய குழந்தைகள் பசியால் வாடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இதனையடுத்து பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை குழந்தைகளின் பசியை போக்குவதற்காக வழங்கியிருக்கிறார். இந்த தொகை இந்திய மதிப்பில் 7 கோடியே 50 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.