shadow

2015ஆம் ஆண்டின் சிறந்த மனிதர். ஒபாமா, மோடியை தோற்கடித்த ஜெர்மனி பெண் அதிபர்

angelaஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில இதழான டைம் உலகின் சிறந்த மனிதரை வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சிறந்த மனிதர் பட்டத்திற்காக மோடி, ஒபாமா, அம்பானி, மலாலா உள்பட 58 பேர் போட்டியில் இருந்தனர்.

ஆனால் அனைவரையும் தோற்கடித்து இந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கலை டைம் இதழின் ஆசிரியர் குழு தேர்வு செய்துள்ளது. சிறந்த மனிதர் பட்டம் வென்ற ஜெர்மனி அதிபருக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஐரோப்பிய கண்டத்தில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் தற்போதைய அகதிகள் பிரச்னை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மெர்கலின் தலைமைத்துவத்தை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக டைம் இதழ் கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Reply