shadow

47e0bdb1-8d3f-4c17-8d1e-1300c6de8532_S_secvpf

தேவையான பொருட்கள்:

சிக்கன் – அரை கிலோ
புளிச்சக்கீரை  – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு நறுக்கியது – தலா 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும்.

* கீரையை நன்றாக மண் போக அலசிய பின்பு இலையின் காம்பை நறுக்கி எடுத்து கீரையை மட்டும் உபயோகிக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் விட்டு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கிய பின் சுத்தம் செய்து வைத்துள்ள கீரை, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* நன்கு வதங்கிய பின் ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து சிவற வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

* மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வதக்கிய பின் கிக்கனை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும்.

*  அடுத்து அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாதூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.

* சிக்கன் சுவைக்கு  உப்பு சேர்க்கவும்.

* அரை கப் தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி வேக விடவும்.

* சிக்கன் முக்கால் பாகம் வெந்த பின்பு தயார் செய்த அரைத்த கோங்குரா விழுதை சேர்த்து ஒரு சேர கலந்து விடவும்.

* நல்ல கொதித்து சிக்கனும் கீரை விழுதும் சேர வேண்டும். கீரையே புளிக்கும், தயிரோ தக்காளியோ சேர்க்க தேவையில்லை. இதற்கு காரம், உப்பு சிறிது அதிகமாகத் தேவைப்படும். விரும்பினால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

* சுவையான ஆந்திரா கோங்குரா சிக்கன் ரெடி.

* இது சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரியாணியுடன் பரிமாறலாம்.  

Leave a Reply