பேரன் பிறந்த நாள்: திருப்பதி கோவிலுக்கு ரூ.26 லட்சம் நன்கொடை அளித்த முதல்வர்
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.26 லட்சத்தை திருப்பதி கோயிலின் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் நர தேவன்ஷ். 3 வயதாகும் இந்த சிறுவனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. பேரனின் பிறந்த நாளை அடுத்து நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தனது மனைவி, மகன் உள்பட குடும்பத்துடன் சென்ற சந்திரபாபு நாயுடு ரூ.26 லட்சத்தை நன்கொடை கொடுத்துள்ளார். .
இந்த தொகை கோயிலில் அன்னதானம் வழங்கும் திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை தனது பேரன் பெயரிலேயே காணிக்கையாக செலுத்தியுள்ளார் நாயுடு.
சந்திரபாபுவுடன் தரிசனத்துக்காக அவரது மகன் நர லோகேஷ் மற்றும் அவரது மனைவி நர பிஹ்மணி மற்றும் நடிகரும் சந்திரபாபுவின் சம்பந்தியுமான பாலகிருஷ்ணா எம்எல்ஏ ஆகியோரும் உடன் சென்றன
Leave a Reply
You must be logged in to post a comment.