அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில நாட்களாக வெகு வேகமாக பரவிவரும் நிலையில் எம்பி ஒருவரின் குடும்பத்தில் உள்ள ஆறு உறுப்பினர்களுக்கும் கொரோனா உறுதியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திர முதல்வர் ஜெகநாதன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி டாக்டர் சஞ்சீவ்குமார். இவர் ஆந்திர மாநிலத்திலுள்ள கர்னுல் என்ற தொகுதியின் எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இந்த நிலையில் இவருடைய குடும்பத்தில் உள்ள ஆறு உறுப்பினர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
டாக்டர் சஞ்சீவ்குமாரின் குடும்பத்தினர் ஆறு பேர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு நாடாளுமன்ற எம்பிக்கும் அவருடைய ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.