shadow

கூவத்தூரில் 8 எம்.எல்.ஏக்களுக்கு என்ன ஆச்சு? ஆம்புலன்ஸ் விரைந்தன

அதிமுக எம்.எல்.ஏக்களை அதிமுக பொதுச்செயலாளர் கூவத்தூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் சிறை வைத்துள்ளதாக கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். எம்.எல்.ஏக்களுக்கு சுதந்திரம் இல்லை என்றும், அவர்களால் சொந்தமாக முடிவெடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் சற்று முன்னர் திடீரென ஒருசில எம்.எல்.ஏக்கள் வாந்தி மயக்கம் அடைந்ததாக பரபரப்பு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று மருத்துவர் குழுவுடன் கூவத்தூர் விரைந்துள்ளது. அவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்படுமா? அல்லது அங்கேயே சிகிச்சை தொடருமா? என்று தெரியவில்லை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை பணிசெய்ய விடாமல், ஓரிடத்தில் அடைத்து வைத்ததற்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசும் காவல்துறையும் உள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply