இன்றுமுதல் விஜய்யுடன் இணையும் ஷங்கர் நாயகி.
விஜய் நடித்து வரும் 59வது படத்தின் படப்பிடிப்பு அட்லியின் இயக்கத்தில் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான சமந்தாவின் காட்சிகள் முடிவடைந்ததை அடுத்து, இன்று முதல் எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இதற்காக நேற்றிரவு சென்னைக்கு திரும்பியுள்ள நடிகை எமிஜாக்சன், விஜய் மற்றும் அட்லியுடனான படப்பிடிப்பை எதிர்நோக்க ஆவலுடன் உள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இன்றைய படப்பிடிப்பில் விஜய்-எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட உரையாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், தீபாவளிக்கு பின்னர் பிரமாண்டமான செட்டில் விஜய்-எமிஜாக்சன் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ‘காக்கி’ என தலைப்பு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் விஜய் ‘செல்லாக்குட்டி’ என்ற பாடலை விஜய் பாடியிருக்கிறார். இதற்கான ரெக்கார்டிங் சமீபத்தில் நடந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.