shadow

முதல்கட்டமாக மும்பையை விட்டு வெளியேறுகிறது அமீர்கான் குடும்பம்

amirkhanநேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகர் அமீர்கான், இந்தியாவில் மத சகிப்புத்தன்மை இல்லாததால் தனது மனைவி இந்தியாவை விட்டு வெளியேறி விடலாமா? என்று கேட்டதாக கூறினார். இதனால் அமீர்கானுக்கு எதிராக கடும் கண்டனங்களும், போராட்டங்களும் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக அமீர்கானின் குடும்பத்தினர் மும்பையில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது டெல்லியில் இருக்கும் அமீர்கான், தனது மனைவி கிரண் மற்றும் குழந்தைகளை மும்பையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதாகவும், இந்த விவகாரம் ஓய்ந்த பின்னர் மீண்டும் மும்பைக்கு செல்லலாம் என அவர் முடிவு செய்துள்ளதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அமீர்கானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமீர்கான் வீட்டுக்கு முன் இந்து அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் டெல்லியில் அவர் மீது போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

Leave a Reply