தமிழக முதல்வரின் கனவு திட்டமான “அம்மா உணவகம்” தமிழகத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக ஆந்திர மாநில அமைச்சர் பரிட்டலா சுனிதா அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
நேற்று சென்னை வந்த சீமாந்திர அரசின் விலைக்கட்டுப்பாடு, நுகர்பொருள் அமைச்சர் பரிட்டலா சுனிதா, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள “அம்மா’ உணவகத்தை பார்வையிட்டார். அங்கு வழங்கப்படும் உணவு வகைகளை ருசித்து சாப்பிட்ட அமைச்சர், ‘உணவுப்பொருட்கள் யாவும் சுவையாகவும், சுகாதாரத்துடனும் தயாரிக்கப்பட்டதாக பாராட்டினார்.
மேலும் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த பொதுமக்களிடம் உணவு குறித்து கருத்துகேட்டபோது, அனைவரும் உணவுவகைகள் சுவையாக இருப்பதாக கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுனிதா, “ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள “அம்மா’ உணவகத்தில் அதிகளவில் கூட்டம் வருவதைப் பார்த்து வியப்படைகிறேன். சீமாந்திரா மாநிலத்திலும் இதுபோன்று உணவு நிலையங்கள் அமைக்க முதல்வரிடம் பரிந்துரைப்பேன்” என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.