shadow


tea for life 2 copyதமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் நியாயமான குறைந்தவிலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பல திட்டங்களை நிறைவேற்றி அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

அம்மா உணவகம், அம்மா காய்கறி கடை, அம்மா குடிநீர், அம்மா உப்பு என பல திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் இந்த வேளையில் தற்போது அம்மா மலைவு விலை தேயிலைத்துள் விரைவில் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (டான்டீ) மூலமாக உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள் வகைகளை ‘அம்மா தேயிலைத் தூள்’ என்ற பெயரில் ஸ்டால்கள் அமைத்து குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் டான்டீ அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply