விரைவில் ‘அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’. ;அதிமுக உடையுமா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் ஒன்றிணைந்து ‘அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் பரபரப்பு அடைந்துள்ளனர்.,
அதிமுக.,வின் முக்கிய பொறுப்புக்களில் உள்ள நபர்கள் தங்கள் பதவியையும், பொறுப்புக்களையும் தக்கவைத்துக் கொள்ள வேறு வழியில்லாமல் சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி வரும் ஒருசில அதிமுக தலைவர்கள் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமாக சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்று கொள்ள மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.
அதிமுக.,வின் சீனியர் அமைச்சர் ஒருவர் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் ‘விரைவில் அதிமுகவின் உண்மையான தொண்டர்களை ஒன்றிணைத்து ‘அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற கட்சி தொடங்கப்படவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.