எடியூரப்பாவுக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக பிரமுகருமான எடியூரப்பா, ஊழல் செய்வதில் முதலிடம் பிடிப்பார் என்று அக்கட்சியின் தேசிய தலைவரே தவறுதலாக செய்தியாளர் சந்திப்பில் கூறியதால் பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
கர்நாட்கா மாநிலத்தில் வருகிற மே 12-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நேற்று கர்நாடகம் வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். காங்கிரஸ் அரசு குறித்து கடுமையாக விமர்சனம் செய்த அவர் ஒரு கட்டத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி எது என்று போட்டி வைத்தால், அதில் எடியூரப்பா அரசுக்குதான் முதலிடம் கிடைக்கும் என சமீபத்த்தில் ஒரு சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கூறியுள்ளார்” என்று கூறியதாக உளறினார்.
அமித்ஷா பேச்சை கேட்டு அருகில் அமர்ந்திருந்த எடியூரப்பா அதிர்ச்சி அடைந்தார். உடனே அமித்ஷா அருகில் இருந்த மற்றொரு பா.ஜ.க. தலைவர் அவர் செய்த தவறை சுட்டுக் காட்டினார். இதையடுத்து சுதாகரித்துக் கொண்ட அமித்ஷா உடனடியாக காங்கிரஸ் அரசுதான் என்று மாற்றி கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.