shadow

அமர்நாத் யாத்திரை தொடங்கியது: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

ஒவ்வொரு ஆண்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்து வரும் நிலையில் இந்த ஆண்டுகான யாத்திரை தற்போது பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் யாத்திரீகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டு யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் இருக்ககும்படி மத்திய அரசு ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், புனித யாத்திரையின் முதல் குழு காஷ்மீர் மாநிலம், பகவதி நகரில் உள்ள பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து வாகனங்களில் இன்று புறப்பட்டு சென்றது. முதல் குழுவை காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம், ஆளுநரின் ஆலோசகர்களான வியாஸ், விஜய்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Leave a Reply