shadow

pon radhakrishnanமற்ற மொழிகளைக் கற்பதுபோல் சம்ஸ்கிருத மொழியையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சமஸ்கிருதத்தை கற்பது தவறல்ல என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அண்மையில் சென்னை பெரம்பூர் கஸ்தூர்பா நிம்சந்த் ஷா பி.முத்தையாலு செட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் 40-ஆம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

மாணவப் பருவத்தில், பெற்றோர்களை விட ஆசிரியர்கள்தான் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடுகின்றனர். ஆசிரியர்கள் எப்படி உள்ளார்களோ அதேபோலத்தான் மாணவர்களும் உருவாக்கப்படுகின்றனர். நாட்டை ஆளப்போகும் திறமை உள்ளவர்களாக மாணவர்களை மாற்றுவதில் ஆசிரியர்களுக்கு பெரும் பங்கு உள்ளது.

தமிழைத்தவிர மற்ற அனைத்து மொழிகளும் பிழைப்புக்கான மொழிகள்தான். எனவே தமிழர்களோடு பேசும்போது தமிழில் பேசுங்கள், ஆனாலும் மற்ற அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். அதில் தவறில்லை.

தமிழக அரசியல்வாதிகள் செய்த தவறால் 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் இந்தி கற்பிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் மாணவர்கள் இந்தி மொழியை கற்க முடியாத சூழல் தமிழகத்தில் ஏற்பட்டது. அண்மையில் ஒரு வார காலம் சம்ஸ்கிருத வாரம் கொண்டாட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மற்ற மொழிகளைக் கற்பதைப்போல் சம்ஸ்கிருதம் மொழியை கற்பதில் எவ்வித தவறும் கிடையாது.  மாணவர்கள், மற்ற மொழிகளை விரும்பி கற்பதை யாரும் தடை செய்யக்கூடாது என்று பேசினார்.

Leave a Reply