shadow

தலைமைச்செயலகத்தில் குவிந்த தமிழக எம்.எல்.ஏக்கள். என்ன ஆகும் நம்பிக்கை வாக்கெடுப்பு?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சில நிமிடங்களில் தனது முதல் உரையை நிகழ்த்திவிட்டு எம்.எல்.ஏக்களிடம் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கூவத்தூரில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்பட அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத்தில் கூடியுள்ளனர். தலைமைச்செயலகத்தில் ஐந்தடுக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. மேலும் இன்று பார்வையாளர்களுக்கும் அனுமதி இல்லை.

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களின் கார்கள் மட்டும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காரும் சோதனை செய்யப்பட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர்.

Leave a Reply