ஊரடங்கு நீட்டித்தால் வாய்ப்பில்லை என தகவல்

கொரோனா வைரஸுக்கு எதிராக மத்திய மற்றும் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்

ஏப்ரல் 14ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைவதை அடுத்து ஏப்ரல் 15ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு இந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்

ஆனால் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் ஊரடங்கு உத்தரவின் விதிப்படி இந்த அனைத்து கட்சி கூட்டம் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இருப்பினும் ஊரடங்கை மீறி அனைத்து கட்சி கூட்டத்தை திமுக நடத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply