shadow

nayantharaஅறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு ஜோடியாக ஆரி என்ற நடிகர் நடிக்கின்றார். இவர் ஏற்கனவே ரெட்டைச்சுழி, மற்றும் நெடுஞ்சாலை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு என உச்சத்தில் இருக்கும் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா, அறிமுக இயக்குனர் இயக்கும் ஒருவரின் படத்தில் அதுவும் புதுநடிகர் ஒருவருடன் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றனவாம். ஒன்று சம்பளம். இந்த படத்திற்காக நயன்தாரா வாங்கியுள்ள சம்பளம் ரூ.2.5 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதை நயன்தாராவை சுற்றியே வருகிறது என்பது இரண்டாவது காரணம்.

இந்த படத்தை இயக்கும் அஸ்வின் சரவணனுக்கு வயது 24தான் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயதாகும் ஒரு சீனியை நடிகையை 24 வயது இளைஞர் எப்படி சமாளித்து வேலை வாங்குவார் என்பதுதான் தற்போது கொலிவுட்டில் ஹாட் டாக். ஆனால் தன்னால் நயன்தாராவை எளிதாக சமாளிக்க முடியும் என்கிறார் அஸ்வின். சீனியர் மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகை என்பதால் காட்சிகளை எளிதாக புரிந்து கொள்வார் என்றும், மேலும் கதை சொல்லும்போதே அவர் பல சந்தேகங்களை கேட்டு படத்திற்கு தயார் நிலையில் உள்ளார் என்பதால் இந்த படத்தில் அவரை வேலைவாங்குவது மிக எளிது என்று அஸ்வின் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இன்னும் பெயர் வைக்கப்படாமல் உள்ள இந்த த்ரில்லர் படத்தின் இசையை ரான் யோஹன் என்பவர் அமைக்கிறார். இந்த படத்தை பிரபு மற்றும் பிரகாஷ்பாபு தயாரிக்கின்றனர்.

Leave a Reply