shadow

dawood imbrahimமும்பை வெடிகுண்டு சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்ட தாவூத் இப்ராஹிமை எங்கிருந்தாலும் கைது செய்து இந்தியாவுக்கு இழுத்து வருவோம். முந்தையை காங்கிரஸ் அரசு போல இந்தவிஷயத்தில் நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்

கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையில் 13 இடங்களில் தொடர் வெடிகுண்டுகள் வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் என்ற நிழல் உலக தாதா, தற்போது பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பின்லேடனை அமெரிக்கா தாக்கிய சம்பவத்திற்கு பின்னர்  அவர் துபாயில் இருப்பதாகவும் ஒருசிலர் கூறுவதுண்டு.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “தாவூத் இப்ராஹிமை பிடிப்பதில் கடந்த காங்கிரஸ் அரசு மெத்தனமாக இருந்தது. அதுபோல் நாங்கள் இருக்க மாட்டோம். தாவூத் இப்ராஹிமை எங்கிருந்தாலும் கைது செய்து இந்தியாவிற்கு இழுத்து வருவோம், என அவர் உறுதிபட கூறியுள்ளார்.

Leave a Reply