கருணாநிதிக்கு திடீர் அலர்ஜி. ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுரை
திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுரையின்படி அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தலைவர் கலைஞருக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்.
மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் தலைவர் கலைஞரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் கலைஞரை காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.