shadow

guru alangudi, thanga golden kavasam,குரு ஆலங்குடி அலங்காரம்ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி நேற்று துவங்கிய இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரகங்களில் ஒருவரான குரு பரிகாரதலமாக விளங்குகிறது.கடந்த 5ம் தேதி குரு பகவான் கடக ராசியிலிருந்து, சிம்ம ராசிக்கு பிரவேசித்ததையொட்டி இக்கோவிலில், குரு பெயர்ச்சி விழா நடந்தது.கடந்த மாதம் 21ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை குரு பகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை நடந்தது. குரு பெயர்ச்சிக்குப் பின் நேற்று துவங்கிய இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.நேற்று லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனர். நேற்று அதிகாலை அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மூலவர் குரு பகவான், தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார்.

Leave a Reply