தேமுதிக கட்சியின் எம்.எல்.ஏ ஆக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அக்கட்சியில் இருந்து விலகி, எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ததை அடுத்து, ஆலந்துர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியின் அதிமுக வேட்பாளர் விஎன்பி வெங்கட்ராமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆலந்தூர் நகரக் கழகச் செயலாளராகவும், சென்னை மாநகராட்சி 12-வது மண்டலக் குழு தலைவராகவும் இருந்த விஎன்பி வெங்கட்ராமன், ஆலந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அதிமுகவின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளதாக அதிமுக கட்சியின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.