அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர்கள் அவ்வப்போது உளவாளிகளை கொடூரமான முறையில் கொலை செய்து வருவது குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் நேற்று அல்கொய்தா அமைப்பு தங்களின் முக்கிய தலைவரான நாசர் அல்-உஹைஷியை கொலை செய்ய உதவிய இரண்டு உளவாளிகளை சுட்டுக் கொன்று பொதுமக்கள் முன்னிலையில் பரபரப்பான பாலத்தில் கட்டி தொங்கவிட்டதாக கூறப்படுகிறது..
கடந்த வெள்ளிக்கிழமை ஏமன் நாட்டில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய கடுமையான தாக்குதலில் அல்-கொய்தா இயக்கத்தின் அரேபிய தீபகற்ப முக்கிய தலைவரான நாசர் அல்-உஹைஷி கொல்லப்பட்டார். இதனை அல்-கொய்தா இயக்கம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இவருடைய மரணத்திற்கு காரணமான இரண்டு உளவாளிகளை சமீபத்தில் அல்கொய்தாவினர் பிடித்தனர்.
பின்னர் இரண்டு உளவாளிகளையும் கண்களை கட்டி, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, அவர்களுடைய பிணங்களை சாலை போக்குவரத்து மிகுந்த ஒரு பாலத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். அந்த வழியாக சென்று வருபவர்கள் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.