shadow

2.0 படத்தில் இருந்து வெளியேற்றப்படுவேனா? அக்சயகுமார் கூறும் அதிர்ச்சி தகவல்

Akshay-Kumarசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தில் கமல்ஹாசன், விக்ரம், அமீர்கான், அமிதாப், அர்னால்டு உள்பட பலர் வில்லன் வேடத்திற்கு பரிசிலீக்கப்பட்டு கடைசியாக அக்சயகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் கதையையோ அல்லது காட்சியையோ பத்திரிகையாளர்களிடம் சொன்னால் இந்த படத்தின் இருந்து தான் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக அக்சயகுமார் அச்சத்துடன் கூறியுள்ளார்.

நேற்று அக்சயகுமார் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ‘2.0’ படத்தை பற்றி கூறுமாறு செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர்களுக்கு பதிலளித்த அக்சயகுமார், ‘இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே இந்த படத்தின் கதை குறித்தும் ,காட்சி அமைப்புகள் குறித்தும் வெளியே எதுவும் சொல்லக்கூடாது என்று இயக்குனர் ஷங்கர் கண்டிஷன் போட்டுள்ளதாகவும், மீறி யாராவது ‘2.0’ படம் குறித்த தகவல்களை கசியவிட்டால் படத்தில் இருந்து நீக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், எனவே இந்த படம் குறித்து தன்னால் எதுவும் கூறமுடியாது என்றும் அக்சயகுமார் தெரிவித்தார்.

ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் ரூ.350 கோடி செலவில் தயாரித்து வருகிறது. இந்த படம் 2017ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும்.

Leave a Reply