அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வரும் கவுதம் மேனன் இயக்கத்தில் வளர்ந்து வரும் அஜீத் 55 திரைப்பத்தின் படப்பிடிப்பு வெகு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது ஈசிஆர் சாலையில் இரவு பகலாக படப்பிடிப்பு நடந்து வருவதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.
இந்த படத்தில் அஜீத் முதன்முதலாக ஐந்து வயது குழந்தைக்கு தந்தையாக நடிக்கிறார். அஜீத் மற்றும் த்ரிஷா தம்பதியின் மகளாக நடிக்கவிருக்கும் குழந்தை குறித்து கவுதம் மேனன் ரகசியமாக வைத்துள்ளார். முதலில் அஜீத் மகள் அனோஷ்காவை இந்த கேரக்டரில் நடிக்க வைக்க கவுதம் மேனன் கேட்டுக்கொண்டதாகவும், இதனால் ஷாலினி கடும் அதிர்ச்சியடைந்து, கவுதம் மேனனை திட்டி அனுப்பி வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தற்போது இன்னொரு வி.ஐ.பியின் மகளை நடிக்க வைக்க கவுதம்மேனன் பேசியுள்ளார். ஆனால் அந்த குழந்தை யார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட இணையதள பத்திரிகை ஒன்று இந்த குழந்தை யார் என்ற தகவலை திரட்டிவிட்டது. இதுகுறித்து விரைவில் பரபரப்பான செய்தி வெளிவரும் என கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.