கவுதம் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் அஜீத் மற்றும் அனுஷ்கா நடிப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்க முக்கிய நடிகைகள் பரிசீலனையில் இருந்தனர். இவர்களில் த்ரிஷா, காஜல் அகர்வால் இருவர்களில் ஒருவர் இந்த கேரக்டர்களில் நடிக்க இருந்தனர். ஆனால் தற்போது இவர்கள் இருவரையும் முந்திக்கொண்டு அந்த இடத்தை பிடித்துவிட்டார் எமி ஜாக்சன்.
எமி ஜாக்சனிடம் கவுதம் மேனன் கதையை கூறியதும் அவர் உடனே அஜீத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டார். எமி நடிக்கும் காட்சிகள் அனைத்தும் வெளிநாட்டில் படமாக்கப்படுவதாகவும், அது எந்த நாடு என்பதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கவுதம் மேனன் கூறினார்.
அதற்கு எமி ஜாக்சன், “ஐ” படத்தின் ஷூட்டிங் காரணமான தான் தன்னுடைய பெற்றோர்களை பார்க்க லண்டனுக்கு பல மாதங்களாக போகவில்லை என்றும், எனவே இந்த படத்தின் படப்பிடிப்பை லண்டனில் வைத்துக்கொண்டால் தனக்கு வசதியாக இருக்கும் என்றும் கவுதம் மேனனிடம் நிபந்தனையாகவும், வெண்டுகோளாகவும் விடுத்துள்ளார். முதலில் இந்த நிபந்தனையை கேட்டு கவுதம் மேனன் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் தயாரிப்பாளரிடம் கலந்து பேசி முடிவு செய்தாக எமியிடம் கூறியுள்ளார். அனேகமாக எமியின் கோரிக்கை ஏற்கபடும் என தெரிகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.