நடிகர்சங்க கட்டிட நிதி: அஜித் என்ன சொன்னார் தெரியுமா?
நடிகர் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் மலேசியாவில் கலைவிழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவுக்கு நடிகர், நடிகையர்களுக்கான விமான டிக்கெட், நிகழ்ச்சி நடத்த செய்த ஏற்பாடு, தங்கும் செலவு, உணவு செலவு ஆகியவைகளை கூட்டிக்கழித்து பார்த்தால் டிக்கெட் கட்டணத்தில் இருந்து ஒன்றும் மிஞ்சாது என்றே தெரிகிறது. இந்த கட்டணத்தில் மிச்சமாகும் தொகையை வைத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டவும் முடிவு செய்திருந்தனர். நல்லவேளையாக சரவணா ஸ்டோர் அதிபர் ரூ.2.5 கோடி கொடுத்ததால் ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சங்க நிதிக்காக நடத்தப்படும் நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள அஜித்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, ‘மக்கள் கொடுக்கும் தியேட்டர் டிக்கெட்டில் இருந்துதான் நாம் சம்பாதிக்கிறோம். அதனால் நடிகர் சங்க கட்டடத்திற்கு நாமே நிதி அளிக்கலாம்’ என்று கூறினாராம்.
இந்த தகவலை நடிகர் சங்க டிரஸ்ட் பதவியில் இருந்து ராஜினாமா செய்த எஸ்.வி.சேகர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.